வியாழன், 3 ஜூன், 2010

உள்நாட்டு இறைவரி திணைக்களம் 158கோடி ரூபா செலவில் புனர்நிர்மாணம்..!!

புலிகளின் வான்படை விமானம் கட்டிடத்தில் சிக்கியதால் சேதமடைந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை புனர் நிர்மாணம் செய்வதற்காக 158கோடி ரூபா செலவானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பல மாடிப்பகுதிகளுக்கு சேதமேற்பட்டுள்ளது. இலங்கை பொறியியல் திணைக்களம் இக்கட்டிட நிர்மாணப் பணிகளை மேற்கொண்டது. புனர்நிர்மாணப் பணிகளுக்காக 104கோடி ரூபா செலவாகும் என முன்னர் மதிப்பீடு செய்யப்பட்டபோதிலும், அதையும் தாண்டி நிர்மாணப் பணிகளுக்கு மொத்தமாக 158 கோடி ரூபா செலவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக