வெள்ளி, 22 மே, 2015

மட்டக்களப்பில் மாணவியின் படுகொலையை கண்டித்து பூரண ஹர்த்தால்.!!(படங்கள் இணைப்பு)

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா  படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று(22.05.2015) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

 நாம் திராவிடர் அமைப்பின் அழைப்பின் பேரில் இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம், மாவட்டத்தின் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுக் காணப்படுவதுடன், பாசாலைகளுக்கு மாணவர்களின் வருகை குறைவாக இருந்தமையால் பாடசாலைகள் முழுமையாக இயங்கவில்லை. 


அரச திணைக்களங்களுக்கும் உத்தியோகத்தர்களது வருகை மற்றும் பொதுமக்களது வருகை குறைவு காரணமாக வேலைகளும் முடங்கின.

 இன்று காலையில் தூர இடங்களுக்கான போக்குவரத்துக்கள் நடைபெற்ற போதும், அரச பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபட்டன.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக