வியாழன், 11 பிப்ரவரி, 2010

ரில்வின் சில்வாமீதும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்-விமல் வீரவன்ச

சரத்பொன்சேகா முப்படைகளின் பிரதானியாக கடமையாற்றிய காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளர் டில்வின் சில்வாவுடன் நெருங்கிய தொடர்பிருப்பதாக தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பொன்சேகாமீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின் டில்வின் சில்வாவும் விசாரணை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தொரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா தேர்தலில் வெற்றிபெற்றால் தான் விரும்பாத அரச உத்தியோகத்தர்களை 24முதல் 72மணித்தியாலங்களுக்குள் கடமையிலிருந்து இடைநிறுத்த உத்தேசித்திருந்தார். அவர் அமெரிக்காவில் இருந்தபோது டில்வின் சில்வாவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதுடன் அந்த உரையாடல் தொடர்பான முழு விபரங்களை நாம் வைத்திருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக