செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

தேசிய அரசாங்கம் வேண்டாம் ஜே.வி.பி...!!!

தேசிய அரசாங்கம் வேண்டாம் என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல் ஒன்றை நடாத்தாமல், நாடாளுமன்றின் காலத்தினை நீட்டிக்க எடுக்கும் முயற்சிகளை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

பொதுத் தேர்தலின் பின்னர் அந்தந்த கட்சிகளுக்கு தேவையான வகையில் தேசிய அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள முடியும்.

தேசிய அரசாங்கமொன்றில் ஜே.வி.பி அங்கம் வகிக்காது என  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


தேசிய அரசாங்கமொன்றை அமைக்க சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக