திங்கள், 19 மே, 2014

துருக்கி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 301 ஆக அதிகரிப்பு.....!!!!

துருக்கி சோமா நகரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு நிலக்கரிச்சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் டனீர் யல்டீஸ் கூறும் போது, "மீட்பு குழுவினர் கடைசியாக 2 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். மொத்தம் 301 தொழிலாளர்கள் இதில் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் முடிவடைந்ததும் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்த
முடிவு செய்துள்ளோம்.

இந்த விபத்து எங்களுக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சி யையும் கொடுத்துள்ளது" என்று நேற்று முன்தினம் செய்தியாளர்கள் சந்திப் பில் தெரிவித்தார். மேலும் 485 சுரங்க தொழிலாளர்கள் இந்த விபத்தில் இருந்து உயிர்தப்பியுள்ளனர். எனினும் இவ்விபத்தில் பலியானோரின் தொகை குறித்து புரிந்து கொள்ள முடியவில்லை. பல சடலங்கள் சுரங்கத்துக்குள் புதையுண்டு இருக் கலாமென பல்வேறு தரப்பிலி ருந்து கூறப்படுகிறது. துருக்கி பலியோனாரின் அஞ்சலிக்காக 3 நாள் துக்கதினத்தை அனுஷ் டித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக