செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

ஜனாதிபதியை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தில் இணைந்து கொள்கின்றோம் எஸ்.பி. நாவின்ன...!!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசாங்கத்தில் இணைந்து கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கைதியாக மாறுவதற்கு இடமளிக்க முடியாது.

இதன் காரணமாக எதிர்வரும் அரசாங்கத்தினால் நிறுவப்பட உள்ள தேசிய அரசாங்கத்தின் பதவிகளை ஏற்றுக்கொள்ள கட்சி தீர்மானித்துள்ளது.

உருவாக்கப்பட உள்ள தேசிய அரசாங்கத்தின் தன்மை பற்றி சரியாக இன்னமும் தெரியாது.


குறுகிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானங்களை எடுக்கவில்லை.

நாட்டை பற்றி சிந்தித்தே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் நாட்டில் புதிய அரசியல் கலாச்சாரமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை வெற்றியடைச் செய்ய உச்ச அளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என எஸ்.பி. நாவின்ன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக