புதன், 25 பிப்ரவரி, 2015

பிரதமர் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிக்கின்றார் பிரசன்ன ரணதுங்க..!!!

பிரதமர் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த முயற்சிக்கின்றார் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இனவாத முத்திரை குத்தி ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வரும் முயற்சி கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

ஒரு புறத்தில் தகவல்களை அறிந்து கொள்ளும் சட்ட மூலம் பற்றி பேசும் அரசாங்கம், மறுபுறத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்ளுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றன.

இதன் மூலம் நல்லாட்சி பிரதமரின் இரண்டு நாக்குகளை உடைய வழமையான முகம் வெளிப்பட்டுள்ளது.


திவயின, இருதின மற்றும் ரிவிர போன்ற ஊடகங்களின் பெயர்களையும் செய்தி ஆசிரியர்களின் பெயர்களையும் ரணில் விக்ரமசிங்க நேரடியாக குறிப்பிட்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல் நல்லாட்சி அரசாங்கம், ஊடகத்தின் மீது பிரயோகிக்கும் கடுமையான அழுத்தமாகவே கருதப்பட வேண்டும்.

“இந்த ஊடகங்கள் ராஜபக்சவின் மலசல கூடங்களைக் கழுவும் சக்கிலி வேலை செய்வதாக” பிரதமர் குருநாகலில் கூறியுள்ளார்

பாதாள உலகக் குழுத் தலைவரைப் போன்று பிரதமர் நடந்து கொள்கின்றார்.

கடந்த அரசாங்க காலத்தில் ஊடக சுதந்திரம் இல்லை என குரல் கொடுத்தவர்கள் இது தொடர்பில் ஏன் அமைதி காத்து வருகின்றார்கள்

கடந்த காலங்களில் பிழைகள் இடம்பெற்றிருந்தால் அதனை சுட்டிக்காட்டி மேலும் பிழைகளை செய்வது நல்லாட்சியாக அமையாது என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக