திங்கள், 12 ஜனவரி, 2015

ஆறுமுகனும் மைத்திரிபாலவின் அரசாங்கத்தில் இணைகிறார்..!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இணைந்து கொள்ளவுள்ளார்.

இது தொடர்பில் இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு வீட்டில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தாம் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதாக ஆறுமுகன் குறிப்பிட்டார்.

ஏற்கனவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் அறுமுகன் தொண்டமான், தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.



இதேவேளை ஆறுமுகன் தொண்டமான் ராஜபக்சவுக்கு ஆதரவளித்தாலும் அவரின் ஆதரவாளர்களான பெருந்தோட்ட தொழிலாளர்களில் 95வீதமானோர் மைத்திரிபாலவுக்கே வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக