வெள்ளி, 26 டிசம்பர், 2014

ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைக்குமாறு வட்டரக்க தேரர் கோரிக்கை..!!

பொதுபல சேனாவிற்கு எதிராக அமைப்பு ஒன்றை உருவாக்கி கருத்துக்களை வெளியிட்டவரே இந்த வட்டரக்க விஜித தேரர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

மழை வெள்ளம் காரணமாக பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஜனாதிபதி தேர்தல் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் நாளை தேர்தல் செயலகத்தில் உத்தியோகபூர்வமாக கோரிக்கை ஒன்று முன்வைக்கப்படும்.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றியும் நாளை அறிவிக்கப்படும் என வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக