வெள்ளி, 7 நவம்பர், 2014

கொஸ்லாந்தை புதிய வீடமைப்புத்திட்டம் பதினைந்தாம் திகதி ஆரம்பம்..!!

கொஸ்லாந்தையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புதிய தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தின் பணிகள் வரும் 15ம் திகதி தொடங்கவுள்ளது.
மத்திய மாகாணத்தின் இராணுவ கட்டளைத் தளபதி மனோ பெரேராவை மேற்கோள்காட்டி திவயின பத்திரிகை இது தொடர்பான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கு மட்டுமே புதிய வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவுள்ளது. இதற்காக பதுளை ஹம்பிடிகந்த பிரதேசத்தில் காணியொன்று இனம் காணப்பட்டுள்ளது.

இந்தக் காணி தோட்ட உரிமையாளரினால் கையளிக்கப்பட்டவுடன் இராணுவத்தினரைக் கொண்டு நிர்மாணப்பணிகள் உடனடியாக முன்னெடுக்கப்படும் என்றும் மனோ பெரேரா தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக