வெள்ளி, 5 மார்ச், 2010

T.M.V.P யின் தேர்தல் பிரச்சாரம் அம்பாறையில் தீவிரம்..!

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் T.M.V.P கட்சியானது கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி தமிழ் மக்கள் வாழ்கின்ற குறித்த சில வெளி மாகாணங்களிலும் அதாவது வட மாகாணம் மற்றும் பொலநறுவை மாத்தறை போன்ற மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றது. கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மிகவும் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் போட்டியிடுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் த.ம.வி.பு கட்சியானது மாவட்ட அமைப்பாளர் வி.சத்தியசீலன் தலைமையில் போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்டத்திற்கான த.ம.வி.பு கட்சியின் தேர்தல் பிரச்சாரமானது மிகவும் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. கட்யின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் த.ம.வி.பு கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோ.புஸ்ப்பராசா, முதன்மை வேட்பாளர் வி.சத்தியசீலன், மற்றும் ஏனைய வேட்பாளர்கள் அனைவரின் அதரவாளர்கள் அடங்கிய குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் தங்களது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
(05.03.2010) த.ம.வி.பு கட்சியின் மாகாணசபை உறுப்பினர் சோ.புஸ்ப்பராசா தலைமையில் நாவிதன்வெளி, வீரமுனை, சொறிக் கல்முனை, வேப்பையடி மல்வத்தை, மத்தியமுகாம் ஆகிய பிரதேசங்pகளில் மிகவும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக