வெள்ளி, 7 நவம்பர், 2014

சீனாவின் அணுஆயுத நீர்மூழ்கிக்கப்பல் இலங்கை வரவில்லை மறுக்கும் கடற்படை..!!

சீனாவின் அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பல் எதுவும் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தரவில்லை என்று கடற்படையினர் மறுத்துள்ளனர்.
அண்மையில் சீனாவின் அணுஆயுத ஏவுகணைகளுடன் கூடிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பாக இந்தியாவில் கடும் எதிர்ப்பலை எழுந்திருந்தது.

இந்நிலையில் இந்தச் செய்தியை இலங்கைக் கடற்படை மறுத்துள்ளது.

சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் கொழும்புக்கு வந்தது உண்மை என்றாலும் அது நீர்மூழ்கிக்கப்பல் கிடையாது. வெறும் டீசலில் இயங்கும் சாதாரண நீர்மூழ்கியொன்றே வந்து சென்றுள்ளது.

கொழும்புத் துறைமுகத்துக்கு எந்தவொரு நாட்டின் யுத்தக் கப்பல்களும் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வந்து செல்லலாம்.


இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 206 போர்க் கப்பல்கள் அவ்வாறு வந்து சென்றுள்ளன. இதனை யாரும் தவறு என்று கூறமுடியாது.

இந்தியாவில் எதிர்ப்பலை ஒன்றை உருவாக்குவதற்காகவே சீனாவின் அணுஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக்கப்பல் இலங்கை வந்து சென்றதாக புரளி கிளப்பி விடப்பட்டுள்ளது.

அதில் எள்ளளவும் உண்மையில்லை என்று பெயர் குறிப்பிடாத கடற்படை உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக