புதன், 1 அக்டோபர், 2014

இலங்கைக்கு வருகிறது பாகிஸ்தான் கடற்படை கப்பல்...!!!!

பாகிஸ்தானின் கடற்படை கப்பலான பிஎன்எஸ் என்ஏஐஎப் இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது.
நல்லெண்ண விஜயமாகவே அந்தக்கப்பல் கொழும்பு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பாகிஸ்தான் கப்பலின் நடவடிக்கை தளபதி கொமடோர் சயீட் இல்யாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் சீனாவில் தயாரிக்கப்பட்டதாகும். இந்த கப்பலில் நவீன ஆயுதங்களுடன் கடல் எல்லைப் பாதுகாப்புக்கான அம்சங்களும் உள்ளடங்கியுள்ளன.

2004 ஆம் ஆண்டு சுனாமியின் போது மாலைதீவில் இந்தக்கப்பல் மீட்புப்பணிகளில் ஈடுபட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக