ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

நலன்புரி முகாமிற்குள் கொண்டுசெல்ல முயற்சிக்கப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்பு

வவுனியா மெனிக்பாம் முகாமிற்குள் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கித் தோட்டாக்களை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ரவைகள் ரி56 ரக துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படுத்தக் கூடியவையென படையினர் தெரிவித்துள்ளனர். முகாம்களுக்குள் வெற்றிலை மற்றும் புகையிலை என்பவற்றைக் கொண்டுசெல்லும் முச்சக்கரவண்டி ஒன்றில்வைத்து இந்தக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன் குண்டுகளுடன் இணைக்கப்பட்டிருந்த மீள்வலு சேர்க்கக்கூடிய இரண்டு மின்கலன்களையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக