வியாழன், 18 மார்ச், 2010

பொன்சேகாவுக்கு நான் மன்னிப்பு அளிக்கப் போவதில்லை: மகிந்த ராஜபக்ஸ..!!

இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி ஜெனெரல் சரத் பொன்சேகா ராணுவ நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கும் நிலையில், அவருக்கு மன்னிப்பு அளிக்கும் விதத்தில் தான் தலையிடப்போவதில்லை என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்கள் எனக்கூறியுள்ள மகிந்த ராஜபக்ஷ, ஏற்கனவே ஆயிரக்கணக்கான இராணுவ சிப்பாய்களை நீதிமன்ற விசாரணைக்குட்படு்த்தியவர் பொன்சேகா எனவும் குறிப்பிட்டுள்ளார். பொன்சேகாவை ஒரு ‘முட்டாள்’ எனவும் இலங்கை ஜனாதிபதி வர்ணித்துள்ளார். மேலும், நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக சமஷ்டி தீர்வை கொள்ளமுடியாது எனவும் கூறி அதனை நிராகரித்துள்ளார் ராஜபக்ஷ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக