செவ்வாய், 20 மே, 2014

இலங்கைக்கான எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் மீண்டும் ஆரம்பித்துள்ளது....!!!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருந்த பொருளாதார தடையைத் தொடர்ந்து ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

எனினும் ஜெனீவாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் அணுவாயுதம் தொடர்பில் மேற்குலக நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையிலான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தானது.

இதனைத் தொடர்ந்து ஈரான் மீதான பொருளாதார தடை தளர்த்தப்பட்ட
நிலையில், மீண்டும் எண்ணெய் ஏற்றுமதியை ஆரம்பித்துள்ளது.

இதன்படி தென்னாப்பிரிக்காவுக்கும், இலங்கைக்குமான எண்ணெய் ஏற்றுமதியை ஈரான் மீண்டும் ஆரம்பித்துள்ளதாக ஈரானின் சர்வதேச விவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் எண்ணெய் ஏற்றுமதி தொடர்பில் சிறிலங்காவுடன் நீண்டகால உடன்படிக்கை ஒன்றும் ஏற்படுத்திக் கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக