புதன், 28 ஏப்ரல், 2010

அமைச்சர்களுக்கான விடயங்கள் இன்னமும் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை..!!

அமைச்சுக்கான விடயங்கள் இன்னமும் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ பூட்டான் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடுதிரும்பியதன் பின்னரே அமைச்சுகளுக்கான விடயங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது அநேகமான அமைச்சர்கள் தங்களது பதவிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளதாகவும் சில அமைச்சர்கள் இன்னமும் பதவியை பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, மீன்பிடிஅமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட சிலர் நாளைய தினம் கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இதேவேளை ஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக