வியாழன், 8 ஏப்ரல், 2010

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண மகளிர் அணியின் அமைப்பாளர் சல்மா ஹம்ஸாவுக்கு அச்சுறுத்தல்..!

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண மகளிர் அணியின் அமைப்பாளர் சல்மா ஹம்ஸா கடந்த ஒரு வாரகாலமாக கிழக்கு மாகாண சபைகள் அமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்களினால் அச்சுறுத்தப்பட்டுள்ளார். இத்தகவலை சல்மா ஹம்ஸா சற்று முன் தெரிவித்தார். தாம் இது குறித்து பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது வாகனம் இனந்தெரியாதோரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் காத்தான்குடி பொலீஸாரினால் கைது செய்யப ;பட்டுள்ளதாகவும் சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக