வியாழன், 8 ஏப்ரல், 2010

தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக ஆயிரத்து 250தனியார் பஸ்கள் சேவையில்..!

தேர்தல் பணிகளில் ஈடுபடுவதற்காக ஆயிரத்து 250தனியார் பஸ்கள் நேற்று முன்தினம் முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். இத்தகைய பெருந்தொகையான தனியார் பஸ்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டமை இதுவே முதன்முறையெனவும் தேர்தல் செயலகத்தின் கோரிக்கைக்கிணங்க இம்மாதம் 6,7,8,9 ஆகிய தினங்களில் இந்த பஸ்சேவைகள் ஈடுபடுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் பணியில் ஈடுபடும் அரச சேவையாளர்கள் வாக்குப்பெட்டிகளின் விநியோகம் வடக்கில் மீள்குடியேறிய மக்கள் வாக்குச் சாவடி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இந்த பஸ்கள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக