புதன், 7 ஏப்ரல், 2010

வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத்துக்கான தேர்தல் ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளன...!

நாட்டின் பல பாகங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் வாக்குச் சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்திலும் அதன் பின்னரான பகுதியிலும் வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து கூடுதலான மக்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில், அவர்களும் வாக்களிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்டத்தின் உதவி தேர்தல் ஆணையாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக