புதன், 28 ஏப்ரல், 2010

தாய்நாட்டை கருத்திற் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் -ரோஹித்த போகொல்லாகம..!!

தாய்நாட்டை கருத்திற் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டுமென முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம கோரிக்கை விடுத்துள்ளார். தீர்மானமிக்க இந்த தருணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்த அனைவரும் அணி திரள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார் சர்வதேசமே உலகமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்த தருணத்தில் வெளிநாடுகளுமன் சுமூகமான உறவை பேணி அதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சிலிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு சென்ற போது அவர் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பை அழிக்க முடிந்தமை மாபெரும் வெற்றியாக கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக