சனி, 6 பிப்ரவரி, 2010

இனியபாரதி சிறுவர்களை படைகளில் இணைப்பதாக வெளியான குற்றச்சாட்டை கருணா மறுத்துள்ளார்..

தமது நெருங்கிய சகாவான இனியபாரதி சிறுவர்களை படையில் இணைப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை தேசிய இனஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துறை அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மறுத்துள்ளார் தம்மை ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் மற்றும் ஆயுதப் பயன்பாடு தொடர்பான பிரதிநிதி பற்றிக் கம்மேட் அவர்களை சந்தித்த போது இனியபாரதி அவ்வாறான சிறுவர்களை படைகளில் சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதை அவருக்கு தெரிவித்ததாக கருணா குறிப்பிட்டுள்ளார். தாம் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ள கருணா சிறுவர்களை தமக்கு படைகளில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் இனியபாரதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கீழ் அம்பாறையில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக