சனி, 6 பிப்ரவரி, 2010

மேலுமொரு அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற சட்டவிரோத படகு மீட்பு

அவுஸ்திரேலியாவை நோக்கி வந்துக் கொண்டிருந்த மற்றுமொரு அகதிகள் படகு வழிமறிக்கப்பட்டு கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன அவுஸ்திரேலியாவின் அகதிகள் விவகாரங்களை கவனிக்கும் அமைப்பு ஒன்றின் பேச்சாளர் இயன் றின்ரொல் இதுபற்றி தெரிவிக்கையில் அப்படகிலிருந்த அனைத்து அகதிகளும் உணவும் தண்ணீரும் இன்றி கடந்த நான்கு நாட்களாக பயணங்களை மேற்கொண்டிருந்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார் அவர்கள் அனைவரும் இலங்கையிலிருந்து ஜனவரி மாதம் 20ம் திகதி புறப்பட்டிருந்ததாகவும் பின்னர் பயணம் செய்வதற்கு எரிபொருளும் இன்றி நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். அவர்களது அவசர அழைப்பை தொடர்ந்து அப்படகை சென்றடைந்த அவுஸ்திரேலிய எல்லைப்படையினர் அவர்களை மீட்டுள்ளனர் குறித்த அகதிகளில் பெரும்பாலானோர் சின்னம்மை மற்றும் வாந்திபேதி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக