வியாழன், 4 பிப்ரவரி, 2010

வவுனியா மதியாமடு பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் பூர்த்தி..!

வவுனியா மதியாமடு பிரதேசத்தில் கண்ணி வெடி மிதிவெடி அகற்றும் பணிகள் பூர்தியடைந்துள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் பீ எஸ் எம் சாள்ஸ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பிரதேசத்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கான முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் எதிர்வரும் நாட்களில் மதியாமடு பிரதேசத்தில் சுமார் 300 குடும்பங்கள் மீள் குடியேற்றப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை நேற்றைய தினம் பூநகரி பிரதேசத்தில் ஆயிரத்திற்கும் அதிகமாக மக்கள் மீள்குடியமர்த்தப்பட்;டமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக