செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

ஜே.வி.பி ஆதரவு பத்திரிகையான லங்கா பத்திரிகை காரியாலயத்தை மீண்டும் திறப்பதற்கு அனுமதி..!!

ஜே.வி.பி ஆதரவு பத்திரிகையான லங்கா பத்திரிகை காரியாலயத்தை மீண்டும் திறப்பதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றையதினம் தங்கொடவில நீதிமன்றத்தில் நடைபெற்றபோதே நீதவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். தபால்மூல வாக்களிப்பு பற்றி ஜனவரி 27ல் குறித்த பத்திரிகை வெளியிட்ட தகவலே இப்பிரச்சினைக்கு காரணமெனவும் லங்கா பத்திரிகை காரியாலயத்திற்கு சீல் வைக்கும் உத்தரவை நீடிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரியிருந்தது. எனினும் இவ்விடயத்தை ஆராய்ந்த நீதவான் லங்கா பத்திரிகையின் பிரசுர நடவடிக்கைகளை மீண்டும் தொடர இடமளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக