செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கதிர்காமத்திற்கு விஜயம்..!!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் கோயிலுக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி கதிர்காமத்திற்கான இந்த விஜயத்தினை நேற்றுமாலை மேற்கொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது, இதன்போது கிரிவெகர விகாரையின் விகாராதிபதி அளுத்வௌ சூரத் தேரரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளார். அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கோயிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி அதன் பின்னர் கதிர்காமத்திலுள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதன்பின்னர் திஸ்ஸ மகாறாமை விகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், விகாராதிபதியை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக