வியாழன், 28 ஜனவரி, 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி: அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் தெரிவிப்பு..!!

இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கக் கிடைத்த வெற்றி ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படவும் வேண்டும் என அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் பிலிப் க்ரவுலி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும் இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தொடர்பில் எமது அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
70 சதவீதமானவர்கள் தேர்தலில் வாக்களித்துள்ளமை வரவேற்கத் தக்க விடயம். அதேவேளை, இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படவும் வேண்டும். சிறுசிறு சம்பவங்களைத் தவிர, தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது” என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக