வியாழன், 28 ஜனவரி, 2010

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கம்..!

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த வாகனங்களை மீளளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இராணுவப்பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை மாலைமுதல் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டது. இராணுவத்திலிருந்து விலகிச்சென்று அவருடன் இருந்த 09இராணுவ அதிகாரிகள் தற்போது இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ளனர். ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த கவசவாகனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வாகனங்களை மீளளிக்குமாறு கேட்டபோதும் இன்று நண்பகல்வரை அவை கையளிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக