வியாழன், 28 ஜனவரி, 2010

வெளியாகியுள்ள தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் ஜே.வி.பிக்கு சந்தேகம்..!!

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கொழும்பில் இன்று ஊடக சந்திப்புக்களை நடத்தியுள்ளன. இதன்போது கருத்துரைத்த ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க வெளியாகியுள்ள ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் குறித்து சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் ஊழல்களைத் தடுக்கும் சக்தி அரசாங்கத்திடம் இல்லையென தெரிவித்த அவர், அதற்கான ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தெரிவித்துள்ளார். இன்று நாட்டுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரும் நேற்றிரவு 11மணிமுதல் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக