திங்கள், 25 ஜனவரி, 2010

தேர்தல் முறைகேடுகளை முறியடிக்க இரகசிய வழிமுறைகளை கையாளும் தேர்தல் ஆணையாளர்..!!

நாளைஇடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்கு மோசடிகளை தடுக்க தேர்தல் ஆணையாளர் சிலவழிமுறைகளை கையாளப் போவதாக தேர்தல்கள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன ஏற்கனவே விஷேட குறியீடுகளை பயன்படுத்துவது மூலம் வாக்கு மோசடிகளை தடுக்கும் வழிகள் குறித்து அவர் கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பொலிஸ் தரப்பினர் வாக்கு மோசடிகளை தடுப்பர் என்ற நம்பிக்கையை அவர் இழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே தமது யுக்திகளை வெளிப்படுத்தாது அவற்றை நாளை தேர்தல்கள் அதிகாரிகளிடம் அவர் தெரிவிக்கவுள்ளதாக தேர்தல் திணைக்கள தரப்புகள் தெரிவிக்கின்றன நாட்டில் தற்காலிக அடையாள அட்டைகள் தேர்தல் வாக்களிப்புக்காக விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 50சட்டவிரோத அடையாள அட்டைகள் புழக்கத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பல்வேறு முறைகளை கையாண்டு தேர்தல் வாக்கு மோசடிகளை முறியடிக்க தேர்தல் ஆணையாளர் தயாராகி வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக