ஐக்கிய நாடுகளின் 64வது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் நோக்கில் பிரதமர் ரட்சிறி விக்கிரமநாயக்க அமெரிக்கா விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு பதிலாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளார். நியுயோர்க் நகரில் இடம்பெறவுள்ள அமர்வுகளில் பிரதமர் உரையாற்றவுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் 64வது பொதுச்சபைக் கூட்டத்தில் பிரதமர் ரட்னசிறி வி;க்கிரமநாயக்க சிங்கள மொழியில் உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கு அவர் விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் சமாதானம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலேயே உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக