ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் தப்பினார் பரத்.

அமெரிக்காவுக்குப் போயிருந்தபோது, ஹெலிகாப்டர் விபத்தில் தான் உயிர் தப்பிய கதையை பார்ப்பவர்களிடமெல்லாம் சொன்னது போதாதென்று பத்திரிகையாளர்களை அழைத்து சொல்லி வருகிறாராம் பரத்.
இவர் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் போயிருந்தபோது (காதலியைப் பார்க்கப் போனதாக கிளைக்கதை ஒன்று உலா வருகிறது!), ஹெலிகாப்டரில் பறந்தபடி ஹட்சன் நதியைப் பார்த்தாராம். அப்போது இவரை இறக்கி விட்டு அதே ஹெலிகாப்டர் மீண்டும் பறந்ததாம், பயணிகளை ஏற்றிக் கொண்டு. எதிர்பாராதவிதமாக ஒரு விமானத்துடன் மோதி சுக்கு நூறாகச் சிதறியதாம் அந்த ஹெலிகாப்டர். அங்கேயே 10 பயணிகளும் உடல் சிதறி பலியானார்களாம். "கொஞ்சம் தாமதித்திருந்தாலும் என் கதி என்னவாகியிருக்கும்... நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது", என பிரஸ்மீட்டில் நடுங்கிக் காட்டினாராம் பரத்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக