ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

இந்திய வியாபாரிகளின் கடவுச்சீட்டுகள் கல்முனையில் குடிவரவு திணைக்களத்தினரால் பறிமுதல்


கல்முனை பிரதேசத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 82 இந்திய வியாபாரிகளின் கடவுச்சீட்டுகள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டைச்சேர்ந்த இவ்வியாபாரிகள் சுற்றுலா விஸா பெற்று நாட்டில் பரவலாக வியாபாரத்தில் ஈடுபடுவதாக கிடைத்த தகவல்களையடுத்து கொழும்பிலிருந்து கல்முனை பிரதேசத்திற்கு சென்றிருந்த குடிவரவு குடியகல்வுதிணைக்களத்தின் விஷேட குழுவொன்று இவர்களுடைய கடவுச்சீட்டுகளை பறிமுதல் செய்து அவர்களை தடுத்துவைத்துள்ளது. குறிப்பிட்ட வியாபாரிகளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு சமூகமளிக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது இவர்கள் தங்கியிருந்த வீடுகள் மற்றும் விடுதிகளை முற்றுகையிட்ட திணைக்கள அதிகாரிகள் கடவுச்சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர் கடந்த 4 5 வருடங்களாக கிழக்கு மாகாணத்தில் தமிழ்நாட்டைசேர்ந்த மேற்படி வியாபாரிகள் தெருத்தெருவாக சென்று வீடுகளிலும் மற்றும் தொழில் நிறுவனங்களிலும் புடவைகளை வியாபாரம் செய்துவருகின்றனர் இவர்கள் மீது தற்போது பொலிஸ் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் பார்வை திரும்பியுள்ள நிலையிலேயே இவர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது இவர்களது வியாபாரம் காரணமாக உள்ளூர் வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக பரவலாகபுகார்கள் செய்யப்பட்டிருந்தன கடந்தமாதம் மட்டக்களப்பு நகர பிரதேசத்தில் 9இந்திய வியாபாரிகளை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர் பின்னர் குற்றப் பணம் செலுத்தி எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டதையடுத்து மட்டக்ளப்பு மாவட்டத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் வெளியேறிவிட்டனர் அதேவேளை கிழக்கு மாகாணத்தில் ஏனைய சில பிரதேசங்களிலும் இன்னமும் இந்திய வியாபாரிகளின் நடமாட்டம் இருப்பதால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளவிருப்பதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் வில்லியம் தெய்வேந்திரா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக