புதன், 16 செப்டம்பர், 2009

வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் இருதினங்கள் நடைபெற்ற சிநேகபூர்வ உதைபந்தாட்ட போட்டிகள்

வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியின் முதல் நாள் 12.09.09 யாழ் பாஸையூர் சென்ற் அந்தேநிஸ் விளையாட்டுக் கழகமும் வவுனியா அல்அசிரா விளையாட்டுக் கழகமும் ஆகிய இரு அணிகளுக்குமிடையில் போட்டியில் யாழ் பாஸையூர் சென்ற் அந்தேநிஸ் விளையாட்டுக்கழகம் 2கோல்களால் வெற்றி பெற்றது. தொடர்ந்து 13.09.09 அன்று யாழ் பாஸையூர் சென்ற் அந்தேநிஸ் விளையாட்டுக்கழகமும் வவுனியா யூனி பைற் விளையாட்டுக்கழகமும் ஆகிய இரு அணிகளுக்குமிடையிலான போட்டியில் யூனி பைற் விளையாட்டுக்கழகம் 01 கோல்களும் யாழ் பாஸையூர் சென்ற் அந்தேநிஸ் விளையாட்டுக்கழகம் 08 கோல்களும் பெற்று வெற்றி பெற்றதுடன் ஆட்டம் நிறைவுபெற்றது. புளொட் அமைப்பின் நங்கூரம் விளையாட்டுக் கழகம் இவ் சிநேகபூர்வ போட்டியில் பங்குபற்றிய யாழ் பாஸைய+ர் சென்ற் அந்தேநிஸ் உதைபந்தாட்ட குழுவினருக்கு காலையும் மதியமும் இரவும் போசனம் வழங்கி கௌரவித்தனர். வைரவப்புளியங்குள புளொட் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா உதைபந்தாட்ட சங்க பிரதிநிதிகள் உட்பட புளொட் முக்கியஸ்தர் லிங்கநாதன் (விசுபாரதி) புளொட் மாவட்ட அரசியல் பொறுப்பாளார் சு.சிவம் நங்கூரம் விளையாட்டுக்கழக பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றி அதிரடி















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக