வெள்ளி, 16 மே, 2014

புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் இலங்கையும், சீனாவும் கைச்சாத்திடவுள்ளன......!!!!!

பாதுகாப்பு படையினருக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் வகையிலான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் இலங்கையும், சீனாவும் கைச்சாத்திடவுள்ளன
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அழைப்பின் பேரில் சீன இராணுவத்தின் மூன்றாம் நிலை ஜெனரல் சூ குயிலி ஏங்க் உள்ளிட்ட குழுவினர் தற்போது இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவில் சீன அரசின் முக்கிய அதிகாரிகள் 25 பேர் உள்ளடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இந்தக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளிட்ட
மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தங்களின் மூலம் இலங்கை மற்றும் சீன இராணுவத்தினருக்கிடையிலான ஒருங்கிணைந்த செயற்பாடுகள், மேலதிகள் பயிற்சிகள் என்பவற்றை மேற்கொள்வதற்கு இணக்கப்பாடு ஏற்படும் என்று தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக