வெள்ளி, 16 மே, 2014

தேர்தலுக்குப் பதிலாக பொதுமக்கள் கருத்துக் கணிப்பு..............!!!!!!!!

அரசாங்கத்தின் தோல்வியை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் கருத்துக் கணிப்பொன்றை நடத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் பொதுத்தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்தி எதிர்க்கட்சிகளை மேலும் பலவீனப்படுத்தும் தந்திரோபாய நகர்வொன்றை முன்னெடுப்பது தொடர்பில் ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார்.

எனினும் அண்மையில் நடைபெற்ற மாகாண சபைகளில் ஆளும் கட்சி பெற்ற வாக்கு எண்ணிக்கையிலான வீழ்ச்சியும், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில்
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்னிறுத்தவுள்ள பொது அபேட்சகர் தெரிவும் ஜனாதிபதிக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலையில் அரசாங்கத்துக்கு இருக்கும் அறுதிப் பெரும்பான்மையை இன்னும் ஆறு வருடங்களுக்கு அப்படியே தக்க வைத்துக் கொள்வது தொடர்பில் பொதுமக்கள் கருத்துக் கணிப்பு ( Referundum) ஒன்றை நடத்துவது தொடர்பில் தற்போது ஜனாதிபதிக்கு அவரது ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற்றுள்ளது.

எனினும் பொதுமக்கள் கருத்துக் கணிப்புக்குப் பதிலாக தேர்தல் முறைகேட்டின் மூலமாக கூடுதல் வாக்குகளில் வெற்றி பெறும் தந்திரோபாயம் குறித்து ஜனாதிபதி கூடுதல் கரிசனை காட்டுவதாகவும் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக