வெள்ளி, 27 ஜூன், 2014

நாமல் ராஜபக்ச சர்வமத மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்....!!!!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சர்வமத மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார்.
அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று இந்த மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.

மல்வத்து பீட மாநாயக்கர்கள், ஏனைய மதத் தலைவர்கள் உள்ளிட்ட 1500 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

பல்வேறு இன சமூகங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவ மாணவியரும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.



நம்பிக்கை தொடர்பில் மதத் தலைவர்கள் இங்கு சொற்பொழிவாற்றியுள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக