யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் தினமும் சென்று பார்வையிடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பார்வதி அம்மாளின் உடல்நிலை குறித்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறுகையில், இன்றுகாலை அவருடைய உடன் நிலை தேறியுள்ளது. திண்ம ஆகாரங்களை உட்கொள்ளக் கூடியதாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள அகில இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் பத்மநாபன் ஞாயிற்றுக்கிழமை பார்வதி அம்மாளை நலன் விசாரித்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக