வியாழன், 15 மே, 2014

யாழ். வேலணை கடற்கரையை அண்டிய பற்றையினுள்ளிலிருந்து கஞ்சா மீட்பு!!!

யாழ். வேலணை 8ஆம் வட்டாரப் பகுதி கடற்கரையை அண்டிய பற்றையினுள்ளிலிருந்து ஒரு கிலோ 350 கிராம் கஞ்சாவை வியாழக்கிழமை (15) மீட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.


மேற்படி பகுதியில் ரோந்தில் ஈடுபட்ட கடற்படையினர், கஞ்சா அடங்கிய பொதியை மீட்டு தம்மிடம் ஒப்படைத்ததாகவும் இந்தியாவிலிருந்து இக்கஞ்சா கொண்டுவரப்பட்டு மறைத்து
வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் கூறினர். இது தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக