வெள்ளி, 18 டிசம்பர், 2009

சிங்கப்பூரில் கொலை குற்றச்சாட்டில் இலங்கை பெண் கைது!

32 வயதுடைய இந்திய பிரஜை கொலை தொடர்பாக இலங்கை பெண்ணொருவர் கொலை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். கடந்த 4ம் திகதி Kaki Bukit building பகுதியில் வைத்து முருகைய்யன் செல்வம் என்ற இந்திய பிரஜை கொலை தொடர்பாக இலங்கையை சேர்ந்த தர்மலிங்கம் புவனேஸ்வரி என்ற 31வயது பெண்மணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த புதன்கிழமை அதிகாலை சிங்கப்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மேற்படி பெண்மணி நேற்றையதினம் வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதும் வழக்கு எதிர்வரும் 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் குற்றம் சாட்டப்பட்டுள்ள புவனேஸ்வரி தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக