
2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா இன்று காலை 11.30மணிக்கு கண்டி ஸ்ரீபுஷபாதான கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தனது கொள்கை பிரகடனத்தை மக்கள் முன்வாசித்து உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். இந்நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உபதலைவர் கருஜயசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியல்ல, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர். பௌத்த இந்து முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆசிகளை வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து எதிர்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத்பொன்சேகா தனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டார் அதில் தெரிவிக்கப்பட்டு;ள்ளதாவது.. இன்றைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் ஜனநாயகம் சரியாக பேணப்படாத நிலையே காணப்படுகிறது எனவே முதலாவதாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுவடைய செய்வதற்கு 17வது திருத்தச்சட்டமூலத்துக்கு அங்கீகாரம் பெற்றுசுயாதீன தேர்தல் ஆணைக்குழுசுயாதீன பொலிஸ் ஆணைக்குழுசுயாதீன நீதிமன்ற ஆணைக்குழுசுயாதீன அரச சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றை உருவாக்குவேன்நாடாளுமன்றம் களைக்கப்பட்டதன் பின்னர் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் உள்ளடக்கியதாக கட்சி சாராத அரசாங்கம் ஒன்றை உருவாக்கி பொதுத்தேர்தலை ஜனநாயக ரீதியாகவும் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வேன்.ஜனாதிபதியாக பதவியேற்று ஒருமாதகாலத்துக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வேன் அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று 6மாத காலத்துக்குள் நாடாளுமன்ற சட்டமூலத்தினூடாக அதனை நீக்கி மக்கள் எதிர்பார்ப்பினை உறுதிப்படுத்துவேன். நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்த பின்னர் மக்களுக்கு பொறுப்புடன் கடமையாற்றக்கூடிய ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தொடு இணைந்து செயற்படுவேன். எனது தாய்நாட்டுக்கும் மக்களுக்கும் என்னால் நிறைவேற்றக்கூடிய சேவைகளை முழுமையான அர்ப்பணிப்புடன் ஆற்றுவேன்.இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம்.. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சகோதர தமிழ் மக்கள் தற்போது முகாம்களில் சிறைபட்டு வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுத்து மீள்குடியேற்றம் செய்து தொடர்ந்தும் அவர்கள் நிம்மதியாக வாழ்வதற்கான சகல வசதிகளையும் முன்னுரிமையுடன் செயற்படுத்துவேன் அதேப்போன்று பயங்கரவாத சந்தேக நபர்களாக கருதப்பட்டு கைதுசெய்யப்பட்ட அனைவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்கும் குற்றவாளிகள் அல்லாதோரை விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்30 வருட யுத்தமுடிவில் இடம்பெயர்ந்து அல்லது தாங்களாகவே தமது வதிவிடங்களை கைவிட்டு செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களை குடியமர்த்த நடவடிக்கை எடுப்பேன்.ஜனநாயக நாடொன்றில் அவசியமாகியுள்ள தகவல் மற்றும் கருத்து சுதந்திர உரிமையை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடைமுறைகளை உருவாக்குவேன் பத்திரிகைப் பேரவை சட்டமூலத்தை ஒழித்து நாட்டில் சுதந்திரமானதும் நீதியானதுமான ஊடக கலாச்சாரத்தை கட்டியெழுப்ப உழைப்பேன்.ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டபின்னர் நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு ஆவண செய்வேன் தேர்தல் காலத்தில் அரச மற்றும் தனியார் ஊடகங்கள் சுயாதீனமாக இயங்குவதற்கு அத்தியாவசியமான நடவடிக்கைகளை எடுப்பேன்.நாட்டு மக்கள் அனைவரும் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு எடுக்கும் ஜனநாயக செயற்பாடுகளுக்கு தடையாகவுள்ளவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.கடந்த காலங்களில் ஊழல் லஞ்சம் போன்றவை நாட்டை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாகவுள்ள பிரதான காரணிகள் இவை என்ற வகையில் அவற்றை முற்றுமுழுதாக ஒழிக்கவும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன். இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவது எனது பிரதான கடமையாகும் என இக்கூட்டத்தில் தனது கொள்ளை பிரகடனத்தை மக்கள் முன்வாசித்து உறுதிமொழி எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக