சனி, 19 டிசம்பர், 2009
ஜனாதிபதி 30லட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெறுவார் -அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி !
ஏதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30லட்சம் மேலதிக வாக்குகளால் அமோக வெற்றி பெறுவார் என இளைஞர் வெளிவிவகார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இணையத்தளமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் இதற்கு முன்னர் இடம்பெற்ற சகல ஜனாதிபதித் தேர்தல்களும் பயங்கரவாத அச்சுறுத்தலின் மத்தியிலேயே இடம்பெற்றன ஆனால் இம்முறை அந்த ஆபத்தான சூழல் நீக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் ஜனநாயக உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் நல்லாதரவைப் பெற்றுள்ள எமது ஜனாதிபதி மீண்டும் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவருக்கு இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக