சனி, 19 டிசம்பர், 2009

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை பொன்சேகாவின் பிரச்சார கூட்டங்களில் கலந்துக் கொள்ள சோமவன்ச அழைப்பு!

எதிர்கட்சிகளின் பொதுவான வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கும் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துக் கொள்ளுமாறு ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத்பொன்சேகாவின் கரங்களை வலுப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவளிக்கும் சோமவன்ச அமரசிங்க சந்திரிக்காவிடம் கோரியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஜெனரல் சரத்பொன்சேகாவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துக்கொண்டபோது அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். எவ்வாறெனினும் ஜனாதிபதி வேட்பாளர் சரத்பொன்சேகாவிற்கு தாம் ஆதரவளிக்க உள்ளதாகவும் தேர்தல் மேடைகளில் ஏறி பிரச்சாரம் செய்யும் திட்டமில்லை எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக