வியாழன், 21 மே, 2015

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட சிசு..!

கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு அருகில் தாயொருவரினால் சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.
பிறந்து ஒரு நாளே நிரம்பிய இந்த சிசு நேற்றிரவு 8.30 அளவில் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சிசுவொன்று கைவிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பிரகாரம், பொலிஸார் சிசுவை பாதுகாப்பாக மீட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

சிசுவின் தாயாரைக் கண்டறிவதற்காக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக