வியாழன், 21 மே, 2015

யாழ் வடமராட்சி, இலங்கை மின்சாரசபை உத்தியோகத்தர்களின் அசமந்தப் போக்கு!

யாழ் வடமராட்சி கரணவாய் வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவில் வதரி துலாக்கட்டு வீதியில் உள்ள மின் கம்பம் இன்று காலை 10.00 மணி அளவில் சரிந்து விழுந்த நிலையில் இவ் வீதியால் பயணிக்கும் மக்களுக்கு பெரும் அசௌவுகரியம் ஏற்பபட்டது. இவ்விடயத்தினை அப் பகுதி மக்கள் உடனடியாக கரவெட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையினருக்கு அறிவித்தல் கொடுக்ப்பட்டும் உரியவேளை நடவடிக்கை எடுக்காமல் 06 மணியாலத்திற்கு பின்னர் சம்பந்த இடத்திற்கு வந்து நடவடிக்கை எடுத்த மினசார சபையின் மீது அப்பகுதி மக்கள் வெகுண்டெழுந்தனர். 

இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அப்பிரிவு பிரதேச செயலகததிற்கும் யாழ்பபாணத்தில் உள்ள இலங்கை மின்சார சபையினருக்கும் முறையிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக