வியாழன், 21 மே, 2015

வவுனியாவில் இன்று பொலிசாரின் பரவலான கைதுகள்.!!

வவுனியா வர்த்தசங்கம் மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் அழைப்பில் பூரண கரத்தால் நடைபெறும் வேளையில் இன்று காலை  பத்திரிகையின் ஊடகவியலாளர் , தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் முக்கியஸ்தர், மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர் ஒருவர் உட்பட பலர் கைது செய்யபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கைது செய்யப்பட்டவர்களுக்கும், ஊடகவியலாளருக்காகவும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்  பொலிசாருடன் நேரில் பிரசன்னமாகி கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்கு முன்னின்று 11.30 மணியளவில் பொலிசார் கைது செய்தவர்களை விடுவித்ததாக எமது நகர செய்தியாளர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக