வியாழன், 21 மே, 2015

யாழ் சுழிபுரத்தில் நீதி கோரி பேரணி.!(படங்கள் இணைப்பு)

வலி மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் திரு.எஸ் ஆணந்தராஜா தலைமையில் நேற்றய தினம் புங்குடுதீவில் மாணவி வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்;டு கொலை செய்யப்பட்ட ஈன நிகழ்வுக்கு எதிர்பபுத் தெரிவித்தும் கொhலைக் குற்றத்தோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் மரணதண்டனைக்கு உட்படுத்துமாறு கோரி இளைஞர் பேரணி  இடம் பெற்றது. 



.இவ் பேரணியானது சுழிபுரம் சந்தியில் ஆரம்பமாகி வழக்கம்பரை சித்தன்கேணி சந்தி ஊடாக சங்hனை பிரதேச செயலகத்தினை அடைந்தது. முடிவில் குறித்த பேரணிக்கு தலைமை ஏற்ற திரு.எஸ் ஆணந்தராஜா அவர்கள் உதவிப் பிரதேச செயலரிடம் கொலைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் பெண்களதும் சிறுவர்களதும் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு மகஜர் ஒன்றை வழங்கினர். 

இவ் பேரணியின் போது பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும்,கொலைக் குற்றவாளிகள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், தழிழ் மாறன் தேசத்துரோகி போன்ற கோசங்களை எழுப்பினர் நேற்றய பேரணியில் சுமார் 500 இளைஞர்கள் பங்கேற்றனர்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக