வெள்ளி, 6 மார்ச், 2015

எனக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தவும் பவித்ரா வன்னியாரச்சி..!!

எனக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு முன்னாள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி கோரியுள்ளார்.
பவித்ரா வன்னியாரச்சிக்கு எதிராக கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பவித்ரா வன்னியாரச்சி  கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு பிரிவின் பணிப்பாளா நாயகம் தெரிவித்துள்ளார்.

எனக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலத்திரனியல் ஊடகங்களின் மூலம் அறிந்து கொண்டேன்.


இந்தக் குற்றச்சாட்டுக்கள் போலியானவை

எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் துரித கதியில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என பவித்ரா வன்னியாரச்சி எழுத்து மூலம் சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை  ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்தால் பல மில்லியன் ரூபா பெறுமதியான வீடு ஒன்றை அப்போதைய எதிர்கட்சி அரசியல்வாதி ஒருவரின் பெயருக்கு எழுதி வைப்பதாக பந்தயம் கட்டியிருந்தார்.

எனினும் தேர்தல் தோல்வியின் பின்னர் அது குறித்து எவ்வித கருத்துக்களையும் பவித்ரா வன்னியாரச்சி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக