
அரசியல் தொடர்பில் விரக்தி நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் மீளவும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எதுவும் கிடையாது.
தற்போதைக்கு இலங்கை வரும் திட்டம் இல்லை.
முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சரண குணவர்தனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய போது அரசியலுக்கு வரும் உத்தேசம் இல்லை எனவும், விரக்தி அடைந்துள்ளதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்த தேவை ஏற்பட்டால் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவது அவ்வளவு சிரமமான விடயமல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக