திங்கள், 2 மார்ச், 2015

ஐ.நா.வின் உதவிச் செயலாளர் இன்று விக்கினேஸ்வரனுடன் சந்திப்பு..!!!

இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மென் இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணம் செல்லும் இவர் இன்று காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டுள்ள நிலையில் இலங்கை வந்துள்ள ஐ.நா.வின் அரசியல் விவகார உதவிச் செயலாளர் வடபகுதி நிலைமையினை ஆராயும்பொருட்டே இன்று யாழ்ப்பாணம் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.


இறுதி யுத்தத்தின்போது இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் முதலமைச்சருடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக